மீன ராசி நேயர்களே, இதுவரையில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அங்கிருந்து இரண்டாமிடமான மேஷ ராசிக்கு 22-04-2023 அன்று மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியில் குரு பகவான் தேவை இல்லாத மன உளைச்சல்.அவமானம் சங்கடங்களை கொடுத்தார். இப்பொழுது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அதாவது 2ம் இடத்தில் சஞ்சரிக்க போகிறார். பொருளாதார நிலையானது மிகச் சிறப்பாக இருக்கும். இது வரை அனுபவித்து வந்த பண கஷ்டங்கள் எல்லாம் பனி போல விலகி விடும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல், வாங்கல் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். அடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். பொருளாதரத்தில் முன்னேற்றம் உயர்ந்து காணப்படும் அனைவருடனும் நல்லுறவு மேம்படும். எதிரிகள் தொல்லை நீங்கும், நீண்ட நாள் உடல் உபாதைகள் நீங்கும். வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்திக்கொள்ளக்கூடிய அளவிற்கு நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உங்கள் 7ம் பார்வையாக 8ம் இடத்தை பார்ப்பதால் எதிரிகளின் போட்டி பொறாமைகள் தொல்லைகள் நீங்கும். இதுவரை உங்களை எதிரி போல் நினைத்தவர்கள் எல்லாம் உங்களிடம் சரணடைந்து விடுவர். வாழ்க்கைத்துணை மூலமாக தன வரவு வரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். வீட்டில் சுப காரியங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும். தனது 9ம் பார்வையாக 10ம் மிடத்தை பார்ப்பாதல் வேலை கிடைக்காதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்,பதவி உயர்வும் வெகுமதியும் கிட்டும். கொடுக்கல்,வாங்கலில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். தொழில் விருத்தி ஏற்படும். 2-ம் இடமான தனஸ்தானத்தில் குரு பகவான் இருப்பது ஒரு சிறப்பு. அடுத்த ஒரு வருடம் காலத்தில் தடையில்லாத தன வரவு காரணமாக பொருளாதார நிலை உச்ச கட்டத்தை எட்டும். மனதில் நினைத்த காரியம் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறும். பேச்சு திறமையால் காரியம் சாதிக்க முடியும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து போகவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் சில செலவுகள் வரும். சின்ன விஷயங்கள் கூட மனநிறைவு தரும்படி நடக்கும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். மன தைரியம் அதிகரிக்கும். பராமரிப்பு தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். அடுத்தவருக்கு உதவுவதால் மன நிறைவு ஏற்படும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். பல வகையிலும் இருந்து எதிர்பாராத உதவி கிடைக்கும். உறவினர்களுடன் மனம் திறந்து பேசுவது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன் தரும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். திருமண வயதுள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் பொறுப்புகளும், கடமைகளும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். மனதில் உற்சாகம் ஏற்படும். தெய்வ பலம் கூடும். பண தட்டுப்பாடு குறைந்து, இடையூறுகள் ஓரளவு சீராகும். கடன் தொந்தரவு ஓரளவு சீராகும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும். பழைய நேர்த்தி கடனை நிறைவேற்ற முடியும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புண்டு. பழைய வண்டி, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். புதிய பொருட்களை வாங்க முடியும். உங்கள் ராசிக்கு 2ல் ராகு 8ல் கேது என 30.10.2023 முடியவும், அதன் பின்பு ஜென்ம ராசியில் ராகு, 7ல் கேது என சஞ்சாரம் செய்ய இருப்பதால் சில நேரங்களில் பொறுமையோடு செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் எப்போதும் கவனமுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும், தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு ஏழரை சனியில் விரைய சனி நடப்பதால் சில விஷயங்களில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் கிட்டும். இந்த குரு பெயர்ச்சி மூலம் எல்லா செல்வ வளங்களையும் பெற முடியும் என்று உறுதியாக கூறலாம்.
பரிகாரம் : சனீஸ்வர பகவானுக்கு நெய் விளக்கு சனிக்கிழமையன்று ஏற்றவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831